Featured Post

Sharing our 2.5 years of experience in Life Natural

தமிழில் We have been practicing Life Natural for more than two and a half years now. I have been thinking to write a post for the past ...

Saturday, October 26, 2013

கீரைக்கூட்டு

தேவையானப் பொருட்கள்: (இரண்டு நபருக்கு)
  • ஏதாவது ஒரு வகை கீரை (நறுக்கியது) – 2 குவளை
  • முளை விட்ட பாசிப்பயறு – 30 கிராம்
  • சீரகம் – 1/2 தேக்கரண்டி
  • சிறு வெங்காயம் – 5 முதல் 10 துண்டுகள்
  • வெள்ளைப்பூண்டு – 1 அல்லது 2 துண்டுகள்
  • பச்சை மிளகாய் – 1
  • இந்துப்பு – சிறிதளவு
  • தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி தழை – சிறிதளவு (விருப்பப்பட்டால் மட்டும்)

பயறை முளைகட்ட வைக்கும் முறை;
  • பாசிப்பயறை முதல் நாள மாலை முதல், குறைந்தது 5 மணிநேரம் நீரில் ஊற வைக்கவும்.
  • இரவு உறங்கச் செல்லும் முன், ஊற வைத்த பயறை, ஓரிரண்டு முறை அலசி, அதிகப்படியான நீரை வடிகட்டிக் கொள்ளவும்.
  • இதை மற்றொரு பாத்திரத்தில் போட்டு, லேசாக காற்று புகும்படி மூடி வைத்தால், காலையில் நன்றாக முளைத்திருக்கும்.
குறிப்பு:
முளைகட்ட வைப்பதற்கு, உங்களுக்கு பரிச்சயமான வேறு ஏதேனும் முறைகள் இருந்தால், அதையே பின்பற்றவும்.


செய்முறை:
  1. முளை விட்ட பாசிப்பயறுடன், சீரகம், வெள்ளைப்பூண்டு மற்றும் முழுப் பச்சை மிளகாய் (காம்பு அகற்றாமல் / நறுக்காமல்) போட்டு சிறிது நீர் ஊற்றி வேகவிடவும். 
  2. பாதி வெந்த பிறகு, அதில் கழுவி வைத்த கீரையை போடவும். கீரை வெம்பி விடாமல் பார்த்துக் கொள்ளவும்.
  3. கீரை ஓரளவு வெந்த பின் அடுப்பை அணைத்து உப்பு போடவும்.
  4. சூடு சற்று குறைந்த பின் விருப்பப்பட்டால் தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்துக் கொள்ளலாம்.

No comments :

Post a Comment